ஸ்டாலின் செத்துவிடுவார் என கருணாநிதியிடம் கூறிய மு.க.அழகிரி
மகன் அழகிரி மீது கருணாநிதியே கூறிய கடும் குற்றச்சாட்டு
கருணாநிதியை கண்ணத்தில் அறைந்தாரா அழகிரி?
இன்று பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த பல அதிர்ச்சி தகவல்கள்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில நாட்களுக்கு முன் திமுகவை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார், வழக்கமாக ஸ்டாலின் அழகிரி சகோதர யுத்தம் தான் நடைபெறும், ஆனால் இம்முறை கருணாநிதி அழகிரி அப்பா-மகன் யுத்தம் நடந்துள்ளது. ஹாங்காங்கில் விடுமுறை முடித்து வந்த அழகிரி நேராக கோபாலபுரம் சென்று தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து கருணாநிதியுடன் வாதிட்டதாக தெரியவந்தது. உடனடியாக அழகிரி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
இது முன்பு நடந்ததை போல லுல்லுலாயி சஸ்பெண்ட் ஆக இல்லாமல் இருந்ததும் அழகிரியும் தொடர்ந்து பேட்டிகள் கொடுப்பதும் நேரடியாகவே கருணாநிதியை ப்லாக்மெயில் செய்கிறார்கள் என்றும்,திமுக தோற்கும் என்றும் பேட்டிகள் அளித்ததும் கழக காசில் முறைகேடுகள் நடக்கின்றன, ஆயிரம் கோடி எங்கே என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து பேசியதை அடுத்து சண்டை உண்மையான சண்டை தான் என்று உணரப்பட்டது.
ஆனால் அன்று அதிகாலையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பில் என்ன நடந்தது என்று தகவல்கள் கிசுகிசுக்களாக பரவின, தினமணி போன்ற பத்திரிக்கையிலேயே பெயர் குறிப்பிடாமல் ஆனால் புரிந்து கொளும் படியாக திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி கண்ணத்தில் அறைந்துவிட்டார் என்று பொருளில் ஒரு பத்தி செய்தி வெளியானது, இது குறித்து செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்ய முயன்றபோது குழப்பமான தகவல்கள் கிடைத்ததால் நடந்ததை சற்றுமுன் செய்திகளால் உறுதியாக கூற முடியவில்லை
இந்நிலையில் இன்று கருணாநிதியின் பேட்டி வெளியாகியுள்ளது, அதில் தான் மு.க.அழகிரி தன்னை ஒருமையில் திட்டியதாகவும், மு.க.ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் செத்துவிடுவார் என்று கூறியதாகவும் தன் மகன் மீதே குற்றம் சாட்டியுள்ளார். வைகோவை கட்சியை விட்டு நீக்கம் செய்ய முனைந்த போதும் கருணாநிதியை வைகோவுக்கு ஆதரவாக புலிகள் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அளித்த பேட்டியில்
மு.க.அழகிரிக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றும் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய
வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.
எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.
மேலும் அழகிரியின் ஆட்கள் பிசிஆர் கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.
அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்
என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.